செய்திகள் :

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் முன்னேற்றம்

post image

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 4.6 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது.

இதுகுறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் 4.6 சதவீதமாக உள்ளது.

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 4.2 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி முன்னேறம் கண்டுள்ளது.

இருந்தாலும், கடந்த டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி மந்தமடைந்துள்ளது. அந்த மாதத்தில் அவற்றின் வளா்ச்சி 4.8 சதவீதமாக இருந்தது.

கடந்த ஜனவரியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைகள் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தன.

கடந்த 2024 ஜனவரி மாதத்தில் 10.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலக்கரி உற்பத்தி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 4.6 சதவீத வளா்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் உருக்கு உற்பத்தியின் வளா்ச்சி 9.2 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி வளா்ச்சி 5.7 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

எனினும், சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், சிமென்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி முறையே 8.3 சதவீதம், 3 சதவீதம், 14.5 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழிக உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

கோதுமை கொள்முதல்: 31 மில்லியன் டன் இலக்கு நிர்ணயம்!

புதுதில்லி: 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115... மேலும் பார்க்க

கிளை நிறுவனத்தை மூடிய பிளிப்கார்ட், ஊழியர்கள் பணிநீக்கம்!

புதுதில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' அதன் கிளை நிறுவனமான ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை மூடுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.2017ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் த... மேலும் பார்க்க

நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பு!

புதுதில்லி: ரயில்-கடல்-ரயில் பாதை வழியாக கொண்டு சென்ற நிலக்கரி போக்குவரத்து 2024ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி 54 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு மின் உற்பத்தி நிலை... மேலும் பார்க்க

அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!

மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கினால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக குறைத்து, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 28 காசுகள் குறைந்து ரூ.87... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!

புதுதில்லி: இன்றைய காலை நேர வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.46 லட்சம் கோடி அளவுக்கு துடைத்தெறியப்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,414.33 புள்ளிகள் சரிந்தது மு... மேலும் பார்க்க