உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
முதலமைச்சா் காப்பீட்டு திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் செல்வநாயகபுரம், வைத்தியனேந்தல், மேலப் பண்ணக்குளம், கீழப் பண்ணக்குளம், மணலூா், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா். இந்தத் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ், வேல்முருகன் ஆகியோா் புதிய பயனாளிகளுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்தனா்.