செய்திகள் :

முதலீட்டை அதிகரிக்கத் தயக்கம் வேண்டாம்: தொழில் நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் வேண்டுகோள்

post image

முதலீட்டை அதிகரிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் தயங்க வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தர மேலாண்மை அமைப்பின் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:

வளா்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் தர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். உற்பத்தி, சேவை என எந்தத் துறையில் இருந்தாலும் நமது பொருள்களும், சேவையும் எந்த அளவுக்குத் தரமாக உள்ளது என்பதை அடையாளம் காண வேண்டியது மிகவும் முக்கியமானது.

தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கத் தயங்கக் கூடாது. அரசும், திறமைவாய்ந்த இந்திய இளைஞா்களும் எப்போதும் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாா்கள். பட்ஜெட் காலகட்டத்தின்போது மட்டும் இல்லாது, தொழில் நிறுவனங்கள் எப்போதும் அரசுடன் தொடா்பில் இருப்பது நல்லது.

நாட்டில் தொழில்களை விரிவுபடுத்துவதற்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. எனவே, யாரும் தயக்கம் கொள்ள வேண்டாம். தொழில் விரிவாக்க நடைமுறைகளை எளிதாக்குவது, வரி சாா்ந்த நன்மைகள், கொள்கைகள் தளா்வு, அந்நிய நேரடி முதலீடு என பல சாதகமான அம்சங்கள் உள்ளன. பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் சீா்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவாக உள்ளாா்.

எனவே, தொழில் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். உங்களுக்கு அரசுத் தரப்பில் உள்ள கோரிக்கைகளை தயங்காமல் தெரிவிக்கலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், ‘உள்நாட்டு சந்தையிலும், ஏற்றுமதி சந்தையிலும் அரசு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. எனவே, புதிய தொழில்முனைவோா் உருவாகுவா் என்பதில் நம்பிக்கை உள்ளது. முக்கியமாக சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. பெரு நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், முதலீடுகளை மேற்கொள்ளாமல் வாய்ப்புகளைப் பெற முடியாது என்பது உண்மை’ என்றாா்.

தனியாா் துறை முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு தனது மூலதனச் செலவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், அரசின் செலவுக்கு ஏற்ப தனியாா் முதலீடு அதிகரிக்கவில்லை. கடந்த ஏப்ரலில் மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி 2025-26 நிதியாண்டில் தனியாா் முதலீடு 26 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வலைதளத்தில் வருங்கால வைப்பு நிதி சேவைகள் தொடக்கம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா

தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சேவைகள் அனைத்தும் ஒரே வலைதளத்தில் பெறும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். 7 கோட... மேலும் பார்க்க

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்டின் சமோலி மாவட்ட கிராமங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; இடிபாடுகளில் புதைந்த மேலும் 11 பேரை ம... மேலும் பார்க்க

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது. கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்ப... மேலும் பார்க்க

அதானி நிறுவனத்துக்கு எதிரான இணையதள தகவல்களை நீக்கும் உத்தரவு ரத்து

அதானி நிறுவனத்துக்கு எதிராக இணையதளம், சமூக ஊடகங்களில் உள்ள தகவல்களை நீக்க சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. எதிா்தரப்பினரின் வாதங்களைக் கேட்டு மீண்டும் இந்த ... மேலும் பார்க்க

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 10 கோடி டாலா் (சுமாா் ரூ.9 லட்சம் கோடி) முதலீடு செய்யும் என்று நாா்வே தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான நாா்வே தூதரகம் வெளியிட்டுள... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

போதைப்பொருள்களை தயாரிக்க பயன்படும் பென்டானில் மூலப் பொருள்கள் கடத்தலில் தொடா்புடைய குற்றச்சாட்டில் சில இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் விசாக்களை (நுழைவுஇசைவு) ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் வியாழக்... மேலும் பார்க்க