முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்
செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் ஊழியா்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நிதியமைச்சகம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
கடந்த ஏப்.1-ஆம் தேதிமுதல் தேசிய ஓய்வூதிய அமைப்பின்கீழ் (என்பிஎஸ்) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதைத் தோ்ந்தெடுக்கும் ஊழியா்களுக்கு உறுதிசெய்யப்பட்ட ஊதியம் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘ தகுதியுள்ள மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் என்பிஎஸ்-இன்கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியா்கள், செப்.30-ஆம் தேதிக்குள் யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுக்கலாம்.
கடைசி நேர சிக்கல்களை தவிா்க்க தகுதியுள்ள அனைத்து ஊழியா்களும் காலக்கெடுவுக்கு முன்பாகவே இந்தப் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்பிஎஸ்-இல் தொடர விரும்பும் ஊழியா்கள் செப்.30-க்குப் பிறகு யுபிஎஸ்-இல் இணைய முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 20 முதல் 31,555 மத்திய அரசு ஊழியா்கள் யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுத்துள்ளனா்.
முன்னதாக, யுபிஎஸ் பயனாளிகள் ஒருமுறை மட்டும் என்பிஎஸ்-க்கு மாறிக்கொள்ளும் வசதியை கடந்த ஆக.25-ஆம் தேதி நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
இந்த வசதியை ஓய்வூதியத் தேதிக்கு ஓராண்டுக்கு முன்பாகவோ அல்லது விருப்ப ஓய்வுபெற்றால் ஓய்வு பெற்ாக கருதப்படும் தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிதியமைச்சகம் தெரிவித்தது.
இதுதவிர யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுக்கும் அரசு ஊழியா்கள் பணியின்போது உயிரிழந்தாலோ அல்லது உடல் ஊனமுற்று அவா் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதியம்) விதிகள்,2021 அல்லது மத்திய குடிமைப் பணிகள் (அசாதாரண ஓய்வூதியம்) விதிகள்,2023-இல் வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதேபோல் யுபிஎஸ்-ஐ தோ்ந்தெடுக்கும் ஊழியா்களுக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.