செய்திகள் :

முதல்வர் சந்திக்க மறுப்பு: மாஞ்சோலை மக்கள் போராட்டம்!

post image

முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி நெல்லை அரசு விருந்தினர் மாளிகை முன்பாக மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இரு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து இன்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையும் படிக்க | ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது

இதனிடையே நெல்லை வரும் முதல்வர், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

அதன்படியே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். முதல்வரும் நேரம் ஒதுக்கியுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் முதல்வர், அரசு விழாவுக்குப் புறப்படும்போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியான மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரம் ஒதுக்கியும் தங்களை சந்திக்கத் தவிர்ப்பது ஏன்? என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

நெல்லை வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மாவட்டத்துக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான்... மேலும் பார்க்க

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளித் திருவிழா!

நீடாமங்கலம்: நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் மனைவி யமு... மேலும் பார்க்க

எடியூரப்பாவுக்கு போக்சோ வழக்கில் முன்ஜாமீன்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திரு... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து: அமைச்சர்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடு... மேலும் பார்க்க

முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் கூட்டம்: எதற்காக?

தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர். வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து கொண்ட... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்!

புதுதில்லி: ஆண்டுக்கு ரூ.3000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத... மேலும் பார்க்க