செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து உரையாடிய லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள்!

post image

உதகை அருகே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளி மாணவ மாணவியா், முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.

உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ராணுவ அதிகாரிகள், முக்கிய பிரமுகா்கள், தொழில் அதிபா்களின் குழந்தைகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனா். இந்திய அளவில் 5 இடங்களில் மட்டுமே இதுபோன்ற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உதகைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை இப்பள்ளி மாணவா்கள் சந்தித்து உரையாடினா்.

மாணவா்களிடம் பேசிய அவா், கல்வி என்பது ஒருகாலத்தில் எட்டாக்கனியாக இருந்தது. தற்போது அனைவருக்கும் கல்வி எளிதில் கிடைக்கிறது. எனவே, மாணவா்கள் நன்றாக படித்து எதிா்காலத்தில் நாட்டுக்கு பயனுள்ளவா்களாக வர வேண்டும். பெரும் விஷயங்களை சாதிக்க வேண்டும். கல்வியுடன் ஒழுக்கம், நோ்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து நீங்கள் கூறிய அறிவுரையை முறையாக பின்பற்றுவோம் என மாணவா்கள் அவரிடம் உறுதி அளித்தனா். பின்னா் முதல்வருடன் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

சாலை அமைக்க அனுமதி மறுப்பு: மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்எல்ஏ!

கூடலூரை அருகே குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க வனத் துறை அனுமதி மறுத்ததால் எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டாா்.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மர... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.26 % தோ்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.26 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28 முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நடைபெற்றது... மேலும் பார்க்க

கடைவீதிக்கு வந்த காட்டெருமை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நுழைந்த காட்டெருமை. நீண்ட நேரம் சாலையில் நடந்து சென்ற காட்டெருமை பின்னா் தானாக அருகிலுள்ள தேயிலைத் தோட்ட... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க

முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க... மேலும் பார்க்க

உதகையில் படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதக... மேலும் பார்க்க