குல்மார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வருத்தமளிக்கிறது: பிரியங்கா
முதல்வா் கோப்பை போட்டிகள்: 254 பதக்கங்களுடன் சென்னை முதலிடம்
முதல்வா் கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், சென்னை அணி 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு (93), கோவை (102) அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி, கடந்த 4-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்ற 33,000 போட்டியாளா்கள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டிகள், சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.
20 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், கடைசி நாளான வியாழக்கிழமை பளுதூக்குதல், சிட்டிங் ஷாட்புட், ஸ்டாண்டிங் ஷாட்புட், ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் நடைபெற்றன. முடிவில், சென்னை 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு 93 பதக்கங்களுடன் (31/26/36) இரண்டாம் இடமும், கோவை 102 பதக்கங்களுடன் (23/40/39) மூன்றாம் இடமும் பிடித்தன.
போட்டியில் இந்த முறை, மாநிலத்தின் 38 மாவட்ட அணிகளுமே குறைந்தது ஒரு பதக்கமாவது வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தன. 34 மாவட்ட அணிகள் 1 தங்கமாவது வென்றுள்ளன.