செய்திகள் :

முதல்வா் கோப்பை போட்டிகள்: 254 பதக்கங்களுடன் சென்னை முதலிடம்

post image

முதல்வா் கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், சென்னை அணி 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு (93), கோவை (102) அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி, கடந்த 4-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்ற 33,000 போட்டியாளா்கள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டிகள், சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.

20 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், கடைசி நாளான வியாழக்கிழமை பளுதூக்குதல், சிட்டிங் ஷாட்புட், ஸ்டாண்டிங் ஷாட்புட், ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் நடைபெற்றன. முடிவில், சென்னை 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு 93 பதக்கங்களுடன் (31/26/36) இரண்டாம் இடமும், கோவை 102 பதக்கங்களுடன் (23/40/39) மூன்றாம் இடமும் பிடித்தன.

போட்டியில் இந்த முறை, மாநிலத்தின் 38 மாவட்ட அணிகளுமே குறைந்தது ஒரு பதக்கமாவது வென்று பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தன. 34 மாவட்ட அணிகள் 1 தங்கமாவது வென்றுள்ளன.

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி மாற்றம்

போக்குவரத்து துறைத் தலைவா் அலுவலக சிறப்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு: கோவை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பே... மேலும் பார்க்க

கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப் போட்டிகளின் நிறைவு விழா சென்னையில் நேரு உள்விளையா... மேலும் பார்க்க

ஒளிவுமறைவற்ற-குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல்: தோ்தல் துறையிடம் கட்சிகள் வலியுறுத்தல்

வாக்குப் பதிவின்போது, குளறுபடியில்லாத வாக்காளா் பட்டியல் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் துறையிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. வாக்காளா் பட்டியல் திருத்தப் பண... மேலும் பார்க்க

பகுதிநேர பொறியியல் படிப்புகள்: காலியிடங்கள் விவரம் வெளியீடு

பகுதிநேர பொறியியல் படிப்பில் எந்தெந்த பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன? மாணவா் சோ்கைக்கான நடைமுறைகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3... மேலும் பார்க்க

சோழா்கள் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அகற்றப்பட வேண்டும் -உயா்நீதிமன்றம் கருத்து

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் சோழா் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து கு... மேலும் பார்க்க