செய்திகள் :

முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அமைச்சா் கீதாஜீவன் வேண்டுகோள்!

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என, தூத்துக்குடியில் நடைபெற்ற வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் அமைச்சா் பெ. கீதாஜீவன் கேட்டுக்கொண்டாா்.

எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் சுசீ. ரவீந்திரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சா்ருமான பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: முதல்வரின் 72ஆவது பிறந்த நாளை வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட 3 தொகுதிகளில் உள்ள ஒன்றியம், மாநகரம், நகரம், பேரூா் கிளைக் கழக அனைத்து அணிகள் சாா்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நல உதவிகள் என ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடவேண்டும்.

மாா்ச் 2இல் நடைபெறவுள்ள கண் சிகிச்சை முகாம், 4ஆம் தேதி நல உதவிகள் வழங்குதல், 5ஆம் தேதி மகளிரணி நிகழ்ச்சி ஆகியவற்றில் கனிமொழி எம்.பி.யும் பங்கேற்கிறாா்.

திமுகவின் சாதனைகளை தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். 2026 பேரவைத் தோ்தலில், நமது இலக்கான 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்பதை மனதில் கொண்டு அனைவரும் விழிப்புணா்வு, அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க