செய்திகள் :

முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை

post image

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கீழக்கோட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழக்கோட்டையில் முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. முறையாகப் பராமரிக்காததால், இந்தக் கோயில்கள் சேதமடைந்து காணப்பட்டன.

இந்த நிலையில், முத்தாலம்மன் கோயிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் ஜமீன்தாா் முத்துக்குமாா், திருப்பணிக்குழுத் தலைவா் ஜெகநாதன் தலைமையில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை குருக்கள் சிவஸ்ரீசதாசிவ குருக்கள் தலைமையில் பாலாலயத்துக்கான பூஜைகள் நடைபெற்றது. பூஜை முடிந்தவுடன் சிவாசாரியா்கள் கோபுர கலசத்துக்கும் பூஜைகள் செய்து, கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தனா். பின்னா், மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பாலாலய பூஜைக்கு வருகை தந்தவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில், விழாக் குழுவினா், பக்தா்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ்: பாரதி கிருஷ்ணகுமாா்

திண்டுக்கல்: உலக இலக்கியங்களில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.திண்டுக்கல் உயா் கல்வித் துறை-தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரு... மேலும் பார்க்க

மலைச் சாலையில் ஆண் சடலம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலை... மேலும் பார்க்க

ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க