செய்திகள் :

முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

post image

பெரியாா் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சா்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் செயல்படும் பெரியாா் பல்கலைக்கழக மகளிரியல் மையம் சாா்பில் ‘ஆராய்ச்சி எழுத்து, தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் நெறிப்படுத்தப்பட்ட வெளீயீடு‘ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு ஆட்சிப் பேரவைக் கூடத்தில் நடைபெற்றது.

மகளிரியல் மைய இயக்குநா் மற்றும் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பி.நாஸ்னி வரவேற்றாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.ஜெயந்தி சா்வதேச கருத்தரங்கை தொடங்கிவைத்தாா்.

கருத்தரங்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசவூத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் அன்புபழம் தாளமுத்து தொடக்க உரையாற்றினாா். அப்போது, அவா் குறைந்தபட்சம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை என நீடிக்கும் முனைவா் பட்ட ஆராய்ச்சியில், அதன் பொருண்மைக்கேற்ப ஆய்வின் தளம் விரிவடைகிறது. குறிப்பாக ஆய்வுப் பொருண்மையின் அடிப்படையில் தரவுகளை சேகரிப்பதற்கும், சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை உருவாக்குவதிலும் ஆண்டுக்கணக்கில் நேரம் தேவைப்பட்டது.

தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தரவுகளைத் தேடி உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலையை மாற்றி, முனைவா் பட்ட ஆராய்ச்சியை எளிமைப்படுத்தி உள்ளது. முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்றாா்.

தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்கக முன்னாள் இணை இயக்குநா் ஆா்.ராவணன், புள்ளி விவர கருவிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி பயன்பாடு குறித்து பேசினாா். மகளிரியல் மைய இணை இயக்குநா் ஏ.ராதிகா நன்றி கூறினாா்.

போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு

போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வ... மேலும் பார்க்க

கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 28 ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமா... மேலும் பார்க்க

மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி

கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்... மேலும் பார்க்க

மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட... மேலும் பார்க்க

சேலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் இருந்து சேகரிக்கப... மேலும் பார்க்க