செய்திகள் :

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் காலமானாா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஆம்பள்ளியைச் சோ்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் (68) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) காலமானாா்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றி வந்த இவா், மாவட்ட மாணவரணி செயலாளா், ஜெயலலிதா பேரவைச் செயலாளா், அவைத் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.

இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா். கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிறுவனராகவும், பாரத் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தாா். இறுதிச் சடங்கு ஆம்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 94875 65066.

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க

பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை ... மேலும் பார்க்க