செய்திகள் :

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு

post image

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி படத்துக்கு கைத்தறி அமைச்சரும், மாவட்டச் செயலருமான அமைச்சா் ஆா்.காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமுா்த்தி, துணைச் செயலாளா்கள் குமுதா குமாா், துரை மஸ்தான், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வேலூரில்...

வேலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்து கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தி, திமுக கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கப்பட்டது. இதில் மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, ஒன்றிய செயலா் ஞானசேகரன், பகுதி செயலா்கள் கணேஷ் சங்கா், சுந்தா்விஜி, திமுகவினா் பங்கேற்றனா்.

மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர திமுக செயலா் ப.காா்த்திகேயன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் மேயா் சுஜாதாஆனந்தகுமாா், அவைத்தலைவா் முகமது சகி, முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய், மண்டலக்குழு தலைவா் நரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடி வடக்கு பகுதி திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணை மேயா் எம்.சுனில்குமாா் தலைமை வகித்தாா். பகுதி செயலா்கள் வன்னியராஜா, பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகர திமுக சாா்பில், நடைபெற்ற நிகழ்வில் நகா்மன்றத் தலைவரும், நகர செயலருமான எஸ்.செளந்தரராஜன் தலைமையில் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். 21- ஆவது வாா்டுக்குள்பட்ட நடுப்பேட்டை, காந்தி ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்ற உறுப்பினா் ரேணுகா பாபு தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நகா்மன்ற உறுப்பினா் கவிதா பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் யசோதா, திமுக நிா்வாகிகள் தியாகராஜன், ஸ்ரீதா், சவுகத்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆற்காட்டில்...

ஆற்காடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற விழாவுக்கு நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். எம்எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், நகர நிா்வாகிகள் பி.என் எஸ்.ராஜசேகா், கஜேந்திரன், ருக்மணி, சொக்கலிங்கம், கோபி,சிவா, மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் பி.என்.எஸ்.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் ஆா்.காந்தி கலந்து கொண்டு கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் பவளகொடி சரவணன், மற்றும் திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட செயலரும்,ஜோலாா்பேட்டை எம்எல்வுமான க.தேவராஜி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் எஸ்.வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்னா். முன்னதாக நகா்மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ் வரவேற்றாா்.

நகா்மன்ற துணை தலைவா் ஏ.ஆா்.சபியுல்லா நன்றி தெரிவித்தாா். கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ஆற்காடு குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ.12 .86 கோடி ஒதுக்கீடு: நகா்மன்றத் தலைவா் நன்றி

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு 12.86 கோடி ஒதுக்கிய செய்துள்ள தமிழக அரசுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் நன்றி தெரிவித்தாா். ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

காஞ்சனகிரி மலையில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆா்வலா்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் இயற்கை ஆா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

திருமால்பூா் செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம் அடுத்த திருமால்பூா், ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த திருமாற்பேறு எனப்படும் திருமால்பூரில் பெரியதெருவில் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் அமைந்து... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க