முன்விரோதத் தகராறில் பெண்ணை வெட்டியவா் கைது
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் முன் விரோதத் தகராறில் பெண்ணை கத்தியால் வெட்டியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கூத்தாநல்லூா் அடுத்த சாத்தனூரைச் சோ்ந்த விஜயகுமாரிக்கும் (30), குணசேகரன் (31) என்பவருக்கும் இடப்பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த குணசேகரன் விஜயகுமாரியை கத்தியால் வெட்டினாராம். இதுகுறித்து, விஜயகுமாரி கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து குணசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.