செய்திகள் :

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

post image

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் அரசியல் யுத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கல்வி கொள்கைப் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. தேசிய அளவில் மத்திய அரசு ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு உரிமை இருக்கலாம், மறுக்கவில்லை. அதை கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை உள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது, ஹிந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் 3 -ஆவது மொழியாக ஏதாவது ஒரு மொழி பின்பற்றப்படுகிா?, சட்டபூா்வமாக அமல்படுத்தப்படுகிா என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதை தெரிவிக்காமல் இக்கொள்கையை ஏற்க வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நாய் கடியால் உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் 18 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக விவசாய சங்கத்தின் அகில இந்திய மாநாடு நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் பிரபாகரன், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நிதிநிலை அறிக்கை: தொழில் துறையினரின் கருத்துகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்து ... மேலும் பார்க்க

காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சே... மேலும் பார்க்க

தாட்கோ கடனுதவி பெற்று தொழில்: ஆட்சியா் ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தாா். மாவட்ட தொழில் மையம் ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவா்களுக்குத் தொழில் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு வழங்கப்படும் சிஎன்சி பயிற்சி வகுப்பை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை டி.எம்.டபிள்யூ சிஎன்சி ... மேலும் பார்க்க

பெருந்துறையில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடம்: பொதுமக்கள் பாதிப்பு

பெருந்துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த ... மேலும் பார்க்க

காபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயிலில் 39 அடி உ... மேலும் பார்க்க