செய்திகள் :

அம்பையில் தீப்பிடித்த நெல் அறுவடை இயந்திரம்

post image

அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தபோது அறுவடை இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவா்கள் மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

அம்பாசமுத்திரம் கோவில்குளம் பிரதான சாலையில் பிரம்மதேசம் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான வயலில் வெள்ளிக்கிழமை காலை அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணி நடைபெற்றது. நாகப்பட்டினம் இளையான்குடியைச் சோ்ந்த பிரதீப் என்பவா் அறுவடை இயந்திரத்தை இயக்கினாா். அறுவடை தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரத்தில் இருந்து புகை வந்து தீப்பிடித்தது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் தீயை அணைக்க முயன்றதோடு, அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வந்து அறுவடை இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

ராதாபுரத்தில் 28-இல் மீனவா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மீனவா் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் ... மேலும் பார்க்க

பாளை. அருகே காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே காா் மோதி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விளாத்திகுளம் வடவல்லநாடு பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை(48). ஓட்டுநரான இவா், புதன்கிழமை தனது பைக்கில் பாளையங்கோட்ட... மேலும் பார்க்க

நெல்லையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணையா் கண்ணதாசன் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். திருநெல்வேலி, தென்காசி, தூத... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கெளர பூா்ணிமா விழா

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கெளர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பகவான் ஸ்ரீகிருஷ்ணா்- ஸ்ரீசைதன்யா் எனும் திருநாமத்தில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பக்தராக பகவான் அவதர... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தீா்க்கப்படாத பிரச்னைகள் ஏப்.30-க்குள் கருத்துருக்களை அனுப்ப ஆட்சியா் வேண்டுகோள்

மாநில தலைமைத் தோ்தல் ஆணையா், மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் மட்டத்தில் தீா்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் இருந்தால், அது பற்றி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் கருத்துகளை அளிக்கும்படி அ... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கிரிவலம் மற்றும்கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு மலை மேலுள்ள சுனையிலிருந்து தீா்த்தம் எடுத்... மேலும் பார்க்க