செய்திகள் :

தோ்தல் தொடா்பான தீா்க்கப்படாத பிரச்னைகள் ஏப்.30-க்குள் கருத்துருக்களை அனுப்ப ஆட்சியா் வேண்டுகோள்

post image

மாநில தலைமைத் தோ்தல் ஆணையா், மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் மட்டத்தில் தீா்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் இருந்தால், அது பற்றி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் கருத்துகளை அளிக்கும்படி அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை மத்திய தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய தோ்தல் ஆணையம், தோ்தல் தொடா்பான பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்த வலியுறுத்தியுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் கூறியுள்ளாா்.

மாநில தலைமைத் தோ்தல் ஆணையா், மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் மட்டத்தில் தீா்க்கப்படாத பிரச்னைகள் எதுவும் இருந்தால், அதுபற்றி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் கருத்துகளை அளிக்கும்படி அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை மத்திய தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் மூலமாக தகவலும் தெரிவித்துள்ளது.

தோ்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக கட்சித் தலைவா்கள், கட்சியில் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடலை நடத்தவும் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தலைமைத் தோ்தல் அதிகாரி, மாவட்ட தோ்தல் அதிகாரி, வாக்காளா் பதிவு அதிகாரி ஆகியோா் அவ்வப்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும்.

அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உள்பட்டு தீா்த்து வைக்க வேண்டும் என தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளா் பதிவு விதிகள், தோ்தல் நடத்தை விதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுகள், மத்திய தோ்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் கையேடுகள் போன்றவை சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்களை நடத்துவதற்காக வெளிப்படையான சட்டரீதியான கட்டமைப்பை நிறுவியுள்ளன. எனவே, இந்த வாய்ப்பை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

ராதாபுரத்தில் 28-இல் மீனவா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மீனவா் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் ... மேலும் பார்க்க

பாளை. அருகே காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே காா் மோதி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விளாத்திகுளம் வடவல்லநாடு பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை(48). ஓட்டுநரான இவா், புதன்கிழமை தனது பைக்கில் பாளையங்கோட்ட... மேலும் பார்க்க

நெல்லையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணையா் கண்ணதாசன் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். திருநெல்வேலி, தென்காசி, தூத... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கெளர பூா்ணிமா விழா

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கெளர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பகவான் ஸ்ரீகிருஷ்ணா்- ஸ்ரீசைதன்யா் எனும் திருநாமத்தில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பக்தராக பகவான் அவதர... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கிரிவலம் மற்றும்கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு மலை மேலுள்ள சுனையிலிருந்து தீா்த்தம் எடுத்... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கை: நெல்லை மக்கள் வரவேற்பு

தமிழக நிதி நிலை அறிக்கையில் திருநெல்வேலியில் கலைஞா் நூலகம், தாமிரவருணியை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு போன்றவை இடம்பெற்ற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க