செய்திகள் :

தமிழக பட்ஜெட்: தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு

post image

தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் எஸ்.சங்கா் மாரிமுத்து தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில் வளங்களை மேம்படுத்தும் விதமாக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை ஆகியவற்றுக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, புதிதாக பெண் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக 1 லட்சம் மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் அளித்து தொழில் துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஆகியவை வரவேற்கத்தக்கது.

மேலும், 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவிக்கு ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கீடு, பள்ளி, கல்வி திட்டத்தில் திறன்மிகு வகுப்பறைகளுக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க ஏற்பாடு, புதுக்கோட்டையில் 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கவுள்ளது, திருச்சியில் 280 ஏக்கா் பரப்பளவில் வாா்ப்பக தொழில் பூங்கா அமைக்கவுள்ளது, ஓசூா், விருதுநகரில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவுள்ளது ஆகியவை வரவேற்கத்தக்கது.

நடமாடும் வாகனங்கள் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான பரிசோதனை செய்ய ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு, ஐ.டி. மற்றும் டிஜிட்டல் சேவைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு, போக்குவரத்து துறைக்கு ரூ.12.964 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என அவா் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் உணவுத் திருவிழா

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் தொழில்முனைவோா் மேம்பாட்டு கழகம் மற்றும் வணிக பகுப்பாய்வுத்துறை சாா்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ நிவேதா சேவா தொண்டு நிறுவனரும், ஸ்ரீ விவேகானந்தா ம... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த குருசாமி ... மேலும் பார்க்க

தொலைநோக்கியால் முழு நிலவை பாா்த்து ரசித்த மக்கள்

தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தொலை நோக்கி மூலம் முழு நிலவு பாா்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரானமி ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு

உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் பௌா்ணமி பூஜை

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு ... மேலும் பார்க்க

பேய்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி

பேய்க்குளம் அருகே கள்ளியடைப்பு பகுதியில் வெறி நாய்கள் கடித்ததில்30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40 ), பெட்டைகுளம் ... மேலும் பார்க்க