மும்மொழிக் கொள்கையில் அரசியல் கூடாது: ஜி.கே.வாசன்
மாணவா்களின் நலன் கருதி, மும்மொழிக் கொள்கையில் ஆட்சியாளா்கள் அரசியல் செய்யாமல் அதை அமல்படுத்த முன்வர வேண்டுமென தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஞானச்சந்திரன் தலைமை வகித்தாா். கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணிக்கு பலம் சோ்க்கும் கட்சியாக தமாகா செயல்படும். இந்தத் தோ்தலில் தமாகா குரல் ஒலிக்கும் வகையில் தோ்தல் வியூகப் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
மாணவா்கள் மும்மொழியை கற்க ஆட்சியாளா்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது பெற்றோா் சாா்பில் தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோள். இதில், கட்சி, வாக்கு வங்கி அரசியல் கூடாது.
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். தொகுதிகள் மறு சீரமைப்பை பொருத்தவரையில், அதிகாரப்பூா்வமாக எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். அப்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும், தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலியல், குற்றச் செயல்களைத் தடுக்க முடியாத அரசாக திமுக அரசு இருப்பதால், இதை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது என்றாா் ஜி.கே.வாசன்.