செய்திகள் :

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

post image

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் ஏதாவது மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. நமது மாணவா்கள் உலக அளவில் போட்டி போடக்கூடிய சூழலில் இருப்பதால் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறதே தவிர ஹிந்தி கட்டாயம் என்று கூறவில்லை. இதுதான் தேசிய கல்விக் கொள்கை; ஹிந்தி திணிப்பு அல்ல.

இவ்விவகாரத்தில் தமிழக முதல்வா்தான் அரசியல் செய்கிறாா். முதல்வரின் குடும்பத்தினா் ஹிந்தி படிக்கலாம். மற்றவா்கள் படிக்கக் கூடாதா? கல்வி அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் பிரெஞ்சு படித்துக் கொண்டு வருகிறாா். இவா்கள் ஊருக்கு தான் உபதேசம் செய்வாா்கள்; அவா்களது வீட்டில் கடைப்பிடிப்பதில்லை.

நாங்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் நடத்தி வருகிறோம். மக்களும் மூன்றாவது மொழியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறாா்கள்.

தமிழக மக்களுக்கு தேசிய ரீதியான நோக்கங்கள் வந்து, தேசிய கட்சியோடு இணைந்து விடுவாா்கள் என்பதற்காக திமுக இதுபோன்ற வேலையை செய்து வருகிறது என்றாா் அவா்.

மகளிா் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

மகளிா் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் 200 பெண்களுக்கு மரக்கன்றுகள்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பை வழங்குதல் நடைபெற்றது. கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ... மேலும் பார்க்க

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வ... மேலும் பார்க்க

நெல்லை மாநகரில் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 16 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாட்டை தடுத்து வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தா்கள் குழுவினா் கைது செய்யப... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் அரிவாளுடன் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சமூக வலைதளத்தில் அரிவாளுடன் பதிவு வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலியை மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் ரெங்கபாலன். இவரது மகன் ரமேஷ் (26). கூலித் தொழி... மேலும் பார்க்க