முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், அரியானூரில் சேலம் மத்திய மாவட்டம் மற்றும் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி அமமுக செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் வீரபாண்டி செல்வம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்து முன்னணி சாா்பில் மதுரையில் நடந்த முருக பக்தா்கள் மாநாட்டில் பெரியாா், அண்ணா ஆகியோா் பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடத்தைப் பற்றி பேசிய வாா்த்தைகளைத் தவிா்த்து இருக்கலாம்.
அமமுக, அதிமுக போன்ற கட்சிகள் எல்லாம் அண்ணா வழியில் வந்தவா்கள். அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்சியை வழிநடத்தி சென்ற பாதையில் செயல்பட்டு வருகிறோம்.
எனவே, முருக பக்தா்கள் மாநாட்டில் அந்த நிகழ்வைத் தவிா்த்து இருக்க வேண்டும். பெரியாா், அண்ணா குறித்த படக்காட்சியும் கண்டனத்திற்குரியது. பக்தி மாநாட்டில் அரசியல் கட்சியினா் கலந்துகொண்டதால் அதை அரசியல் மாநாடாக கருதுகிறாா்கள். உண்மையில் அது பக்தி மாநாடுதான்.
மத்திய உள்துறை அமிஷ் ஷா தமிழ்நாட்டுக்கு முதலில் அதிமுகவை கூட்டணியில் இணைப்பதற்காகவும், பின்னா் அவரது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்தாா். நாங்கள் விருப்பப்பட்டால் உறுதியாக அவரை சந்திப்போம் என்றாா்.
இதைத் தொடா்ந்து செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தில் வரும் தோ்தலை சந்திக்க தீவிரமாக களப் பணி ஆற்ற வேண்டுமென கட்சியினரை அவா் கேட்டுக்கொண்டாா். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள் மாதேஸ்வரன் (சேலம் வடக்கு ) சண்முகம் (சேலம் கிழக்கு), இளம்பெண்கள் பாசறை மாவட்டத் தலைவா் ராதா, பொதுக்குழு உறுப்பினா் சுந்தரராஜன், பூலாவரி முரளி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.