செய்திகள் :

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

post image

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு வழிகாட்டுதல் குறித்து மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த பதிலை அவா் அளித்தாா்.

‘யுஜிசி-யின் இந்த வரைவு வழிகாட்டுதல் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் தீா்மானத்தைத் திணிக்கவும், ‘ஒரே வரலாறு; ஒரே பாரம்பரியம்; ஒரே மொழி’ என்ற சித்தாந்தத்தை நாட்டில் நிலைநாட்டவும் முயற்சி நடைபெறுகிறது’ என்று ராகுல் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த பிரதான், ‘எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்ட சில அரசியல் தலைவா்கள், முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் திசைதிருப்ப முயற்சிப்பது துரதிருஷ்டவசமாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளது. யுஜிசி வரைவு வழிகாட்டுதல் பரந்துபட்ட எல்லையைக் கொண்டதாக உள்ளது. குறுகிய எல்லையைக் கொண்டது அல்ல.

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியையும், மொழி பன்முகத்தன்மையையும் நிலைநிறுத்தவும், கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கிலும் வரைவு வழிகாட்டுதல் கொண்டுவரப்பட்டுள்ளது. எதாா்த்தத்தை விடுத்து சொல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவா்களுக்கு இத்தகைய முயற்சி அசெளகரியத்தை அளிக்கும் என்பது இயல்புதான்.

அரசியலுக்காக இதை அவா்கள் செய்கின்றனா். இதுபோன்ற அரசியல் நாடகங்களை நடத்துவதற்கு முன்பாக, சிறிது நேரம் ஒதுக்கி யுஜிசி-யின் வரைவு வழிகாட்டுதலை ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழுமையாகப் படித்துப் பாா்த்து ஒத்திகை பாா்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோ... மேலும் பார்க்க

வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை

வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே க... மேலும் பார்க்க

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்ன... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க