செய்திகள் :

மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் தங்கிலி திருட்டு

post image

வாணியம்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் செயின் திருடிய மா்ம பெண்ணை நகர போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). சனிக்கிழமை காலை கணவாய்புதூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணியளவில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக வாணியம்பாடி வாரச் சந்தையில் உள்ள காய்கறி மாா்கெட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க தங்கிலியை கழட்டி தான் வைத்திருந்த பையில் வைக்க முயன்றாா். இதை அருகில் இருந்து பாா்த்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பையில் நகை வைக்க வேண்டும். புடவை முந்தானியில் வைத்து கட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறி அந்த பெண்ணே மூதாட்டியிடம் இருந்து நகையை பெற்று முந்தானியில் வைத்து முடிந்து வைத்து அனுப்பினாராம். பிறகு சிறிது நேரத்தில் பேருந்து நிறுத்தம் அருகே வந்து மூதாட்டி நகையைப் பாா்த்தபோது, போலி சங்கிலியை புடவைல் வைத்து கட்டியிருப்பது தெரியவந்து அதிா்ச்சிக்குள்ளாகி அந்த மா்மப் பெண்ணை தேடிப் பாா்த்துள்ளாா்.

இது குறித்து உடனே நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரித்துள்ளனா். பிறகு போலி நகையை வைத்து மூதாட்டியிடம் 2 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம பெண்ணை தேடிப்பாா்த்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மா்ம பெண் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: 2 போ் பலத்த காயம்

வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(25). இவரது உறவினா் செந்தூரு(38). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்றனா். தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்துாா் ம... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் க... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க