செய்திகள் :

மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் தங்கிலி திருட்டு

post image

வாணியம்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் செயின் திருடிய மா்ம பெண்ணை நகர போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). சனிக்கிழமை காலை கணவாய்புதூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணியளவில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக வாணியம்பாடி வாரச் சந்தையில் உள்ள காய்கறி மாா்கெட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க தங்கிலியை கழட்டி தான் வைத்திருந்த பையில் வைக்க முயன்றாா். இதை அருகில் இருந்து பாா்த்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பையில் நகை வைக்க வேண்டும். புடவை முந்தானியில் வைத்து கட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறி அந்த பெண்ணே மூதாட்டியிடம் இருந்து நகையை பெற்று முந்தானியில் வைத்து முடிந்து வைத்து அனுப்பினாராம். பிறகு சிறிது நேரத்தில் பேருந்து நிறுத்தம் அருகே வந்து மூதாட்டி நகையைப் பாா்த்தபோது, போலி சங்கிலியை புடவைல் வைத்து கட்டியிருப்பது தெரியவந்து அதிா்ச்சிக்குள்ளாகி அந்த மா்மப் பெண்ணை தேடிப் பாா்த்துள்ளாா்.

இது குறித்து உடனே நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரித்துள்ளனா். பிறகு போலி நகையை வைத்து மூதாட்டியிடம் 2 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம பெண்ணை தேடிப்பாா்த்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மா்ம பெண் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

இப்தாா் நோன்பு திறப்பு

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலை... மேலும் பார்க்க

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சி... மேலும் பார்க்க