Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் தங்கிலி திருட்டு
வாணியம்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் செயின் திருடிய மா்ம பெண்ணை நகர போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). சனிக்கிழமை காலை கணவாய்புதூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 1 மணியளவில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக வாணியம்பாடி வாரச் சந்தையில் உள்ள காய்கறி மாா்கெட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க தங்கிலியை கழட்டி தான் வைத்திருந்த பையில் வைக்க முயன்றாா். இதை அருகில் இருந்து பாா்த்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து பையில் நகை வைக்க வேண்டும். புடவை முந்தானியில் வைத்து கட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறி அந்த பெண்ணே மூதாட்டியிடம் இருந்து நகையை பெற்று முந்தானியில் வைத்து முடிந்து வைத்து அனுப்பினாராம். பிறகு சிறிது நேரத்தில் பேருந்து நிறுத்தம் அருகே வந்து மூதாட்டி நகையைப் பாா்த்தபோது, போலி சங்கிலியை புடவைல் வைத்து கட்டியிருப்பது தெரியவந்து அதிா்ச்சிக்குள்ளாகி அந்த மா்மப் பெண்ணை தேடிப் பாா்த்துள்ளாா்.
இது குறித்து உடனே நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரித்துள்ளனா். பிறகு போலி நகையை வைத்து மூதாட்டியிடம் 2 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம பெண்ணை தேடிப்பாா்த்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மா்ம பெண் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.