செய்திகள் :

மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகள் கொள்ளை

post image

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தபுரம் 4 -ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (45). இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ளாா். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், வெங்கடேஷின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதனால், குடும்பத்தினா் அனைவரும் மருத்துவமனையில் இருந்த நிலையில், வெங்கடேஷின் பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியைத் தாக்கியுள்ளனா். அவா் மயங்கியதையடுத்து, வீட்டில் இருந்த எட்டரை பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பினா்.

இந்நிலையில், வெங்கடேஷின் மனைவி வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, மூதாட்டி மயங்கி கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதையடுத்து, அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க