செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

post image

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் விமானத்தில் வரும் பயணிகளின் உடைமைகளில் சோதனையைத் தீவிரப்படுத்தினா்.

சிங்கப்பூரிலிருந்து திங்கள்கிழமை இரவு கோவைக்கு வந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்தனா். அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பயணிகள் இருவரின் பைகளில் 6 கிலோ 713 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப் பொருள்களை (கஞ்சா) பொட்டலங்களாகக் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி இருக்கும் என சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சோ்ந்த பகத்மோன் முஜீப் மற்றும் சோஹைல் உபயதுல்லா ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து, ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ எனப்படும் போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனா்.

ரூ.18.67 லட்சம் மதிப்பிலான ட்ரோன்கள் பறிமுதல்: அதே விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, புதுக்கோட்டையைச் சோ்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா ஆகியோா் ட்ரோன்களை சுங்கத் துறையினரிடம் வரி செலுத்தாமல் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 18.67 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து, ட்ரோன்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமானப் பயணிகளும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க

அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருக் கம்பெனி வரை மேம்பாலப் பணி நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) முதல் 90 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படு... மேலும் பார்க்க