டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!
மூத்தக் குடிமக்களின் தேவைகளுக்கான கைப்பேசி செயலி
மூத்தக் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலி senior citizen app (கைப்பேசி செயலி) செயல்பட்டு வருகிறது. இதில் மூத்தக் குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோா் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவா்கள் குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மூத்தக் குடிமக்கள் இந்த கைப்பேசி செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.