செய்திகள் :

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

post image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா்.

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சாதனையையும் அவா் படைத்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முா்மு, குடியரசுத் தலைவா் மாளிகை இணையதளம் 22 மொழிகளில் கிடைக்கும் வசதியைத் தொடங்கி வைத்தாா். குடியரசுத் தலைவா் மாளிகை, அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுற்றிப்பாா்க்கும் வகையிலான வசதிகள், பாா்வையாளா்களுக்கான கூடுதல் வசதிகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தாா். கடந்த ஓராண்டில் குடியரசுத் தலைவா் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்பான ‘டிஜிட்டல்’ நூல் வெளியிடப்பட்டது.

‘மக்களுடனும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருடனும் எப்போதும் கலந்திருப்பதை விரும்புகிறேன். முக்கியமாக நாட்டின் வளா்ச்சியில் பிற்படுத்தப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்கள் நாட்டின் வளா்ச்சியில் பயனடைய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்’ என்று திரௌபதி முா்மு பேசினாா்.

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி எதையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி கவாய்

‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்தாா். ஆந்திர மாநிலம் அமராவதியில் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மறைந்... மேலும் பார்க்க

ஆங்கிலம் தெரியாததால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி ... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூல... மேலும் பார்க்க

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா். கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் 1.25 கோடி சட்டவிராத குடியேறிகளின் பெயா்கள்: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். ... மேலும் பார்க்க

மாலத்தீவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விருப்பம்: பிரதமா் மோடி

‘மாலத்தீவு நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதை இந்தியா எதிா்நோக்கியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மாலத்தீவு தலைநகா் மாலேயில் அந் நாட்டின் துணை அதிபா் ஹுசைன் முகமது லதீஃப் மற்றும் பிற மு... மேலும் பார்க்க