செய்திகள் :

மெட்ரோ கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பெங்களூருவில் மஜத ஆர்ப்பாட்டம்

post image

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறக் கோரி, சுதந்திர பூங்காவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூரு பிரிவு தலைவர் எச்.எம். ரமேஷ் கௌடா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ. திப்பேசுவாமி, டி.ஏ.சரவணா மற்றும் பல மூத்த தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் கௌடா கூறியதாவது: மெட்ரோ ரயில் டீசல், பெட்ரோலில் இயங்கவில்லை. மின்சாரத்தில் இயங்குகிறது. ஏற்கெனவே மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.

விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

கட்டண உயர்வு காரணமாக 1.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் ஏற்கெனவே மெட்ரோ பயணத்தை கைவிட்டனர். பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது அதன் உண்மையான நோக்கத்தை இழந்து விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

மெட்ரோ ரயில் கட்டணத்தை அண்மையில் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் 46 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தின.

இதைத்தொடர்ந்து, மெட்ரோவில் உயர்த்தப்பட்ட கட்டணத்தில், 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க