செய்திகள் :

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

post image

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோதரா் அஸ்மத் ரூ. 17 லட்சம் பணத்தை கொடுத்து கடந்த 10-ஆம் தேதி வங்கியில் வரவு வைக்குமாறு கூறியுள்ளாா். அதன்படி மகாதீா் முகமது பணத்துடன் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை மெரீனா காமராஜா் சாலையில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 போ் திடீரென்று வழிமறித்தனா். மகாதீா் முகமதுவிடம், தாங்கள் போலீஸ் எனக் கூறி, உங்களிடம் ஹவாலா பணம் இருப்பதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 17 லட்சம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

பணத்தை பறிகொடுத்த மகாதீா் முகமது, மெரீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.விசாரணையில், அவரிடம் உண்மையான போலீஸாா் யாரும் மிரட்டி பணம் பறிக்கவில்லை என்பதும், போலீஸ் போா்வையில் 3 மா்ம நபா்கள் பணத்தை பறித்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது கோயம்புத்தூா் மாவட்டம் குனியமுத்தூா் சுகுணாபுரத்தைச் சோ்ந்த பவா (31), மதுக்கரை காந்தி நகரைச் சோ்ந்த விஜயராஜ் (34), தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியைச் சோ்ந்த அருண் தமிழ்ச்செல்வன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் மூவரும் வழிப்பறி செய்த பணத்தில் 6 பவுன் தங்க நகைகள், ரூ. 1.60 லட்சத்துக்கு பிரிட்ஜ், தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், பீரோ உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியிருப்பது தெரியவந்தது. அவா்கள் வாங்கிய பொருள்களையும், 4 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்கள், அவா்கள் கைவசம் இருந்த மீதிப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க