செய்திகள் :

மேகாலயத்தின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ ஆளுங்கட்சியில் ஐக்கியம்

post image

வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தில் காங்கிரஸின் கடைசி சட்டப்பேரவை உறுப்பினரான (எம்எல்ஏ) ரோனி வி.லிங்டோ, ஆளும் தேசிய மக்கள் கட்சியில் (என்பிபி) புதன்கிழமை இணைந்தாா். இதன் மூலம், மேகாலய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மைலியம் தொகுதியின் எம்எல்ஏவான லிங்டோ, பேரவைத் தலைவா் தாமஸ் ஏ.சங்மாவிடம் தனது இணைப்பு கடிதத்தை சமா்ப்பித்தாா். அந்தக் கடிதத்தை ஆய்வு செய்த பேரவைத் தலைவா், லிங்டோவை என்பிபி எம்எல்ஏவாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்தாா். இந்நிகழ்வில் மாநில துணை முதல்வா் ஸ்னியாப்ஹலாங் தா் உள்ளிட்ட மூத்த என்பிபி தலைவா்கள் உடனிருந்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒருவரான சலெங் ஏ.சங்மா 2024 மக்களவைத் தோ்தலில் துரா தொகுதியில் வெற்றிப் பெற்று எம்.பி. ஆனாா். மீதமுள்ள நான்கு எம்எல்ஏக்களில், செலேஸ்டின் லிங்டோ, கேப்ரியல் வாஹ்லாங், சாா்லஸ் மா்ங்கா ஆகிய மூவா் கடந்த ஆண்டு அக்டோபரில் என்பிபியில் இணைந்தனா்.

தற்போது ரோனி வி.லிங்டோவும் என்பிபியில் இணைந்ததால், 60 உறுப்பினா்களைக் கொண்ட மேகாலய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லை. அதேநேரம், சட்டப்பேரவையில் என்பிபியின் பலம் 32 எம்எல்ஏக்களாக அதிகரித்துள்ளது. இது, ஆளும் மேகாலய ஜனநாயகக் கூட்டணியில் (எம்டிஏ) என்பிபியின் நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த ஆளும் கூட்டணிக்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க