செய்திகள் :

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

post image

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

கோவை

இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதிகிஷோர் (15). இந்த சிறுவனை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் கடித்துள்ளது.

இதனிடையே கடந்த 9-ம் தேதி சிறுவனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டதால், சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிஷோருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார்கள்.

பரிசோதனை

கடந்த சில நாள்களாக சிறுவனுக்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. நாயின் செயல்பாடுகள் அந்த சிறுவனை தொற்றிக் கொண்டதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கும் சிகிச்சை பலனில்லாமல், உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக கிஷோர் கடந்த 10- தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மரணம்
மரணம்

அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் நேற்று உயிரிழந்தார். இது சிறுவன் உறவினர்கள், கோவை மக்களிடமும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) ம... மேலும் பார்க்க

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இ... மேலும் பார்க்க

Cyber Crime: பேஸ்புக் காதலி சொன்ன ஆசை வார்த்தை; 74 வயது முதியவர் ரூ. 3 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் வசிக்கும் 74 வயது முதியவர் ஒருவர் ஃபேஸ்புக் காதலி சொன்ன ஆலோசனையைக் கேட்டு ரூ.3.7 கோடியை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 74 வயது முதியவருக்கு ஃபேஸ்புக் மூலம் திவ்யா சர்மா என்ற பெண்ணின் அறிம... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: போலி ஆபாச வீடியோவைக் காட்டி MLA-விடம் ரூ.10 லட்சம் பறிப்பு; விவசாயி கைதான பின்னணி என்ன?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிவாஜி பா... மேலும் பார்க்க

மதுரை: கஞ்சா போதையில் அட்டகாசம்; ஆயுதங்களுடன் கும்பல் வலம்; கார், பைக், கடைகளை உடைத்து ரகளை

மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது.க... மேலும் பார்க்க

விருதுநகர்: தீயணைப்புத் துறையினர் Gpay-ல் தீபாவளி வசூல்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியது எப்படி?

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் து... மேலும் பார்க்க