செய்திகள் :

மேட்டூரில் முதல் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை: கணவனுக்கு போலீஸ் வலை

post image

மேட்டூர்: மேட்டூரில் மனைவியை, புதன்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில், கார்த்தி சங்கீதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் மனைவி ரேவதி கடந்த நான்கு ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து தனியே வசித்து வருகிறார்.

கார்த்தி முதல்வர் மனைவி ரேவதி பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்துள்ள நிலையில், நான் வாங்கி கொடுத்த நிலத்தையும் வீட்டையும் எனது பெயருக்கு மாற்றிக் கொடுக்குமாறு ரேவதியிடம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு அப்படியெல்லாம் எதுவும் மாற்றம் செய்துதர முடியாது என்று ரேவதி கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ரேவதியை கார்த்தி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா்.

மூளை சிதறிய நிலையில் சடலமாக கிடக்கும் ரேவதியை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் ரேவதியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் மேட்டூர் போலீசார், தப்பியோடிய ஓட்டுநர் கார்த்தியை தேடி வருகின்றனர்.

முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.அண்ணா பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ... மேலும் பார்க்க

ஆளுநா் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் அறிவித்துள்ள... மேலும் பார்க்க

நெசவாளா்கள் போராட்டம்: தேமுதிக ஆதரவு

மே 19-ஆம் தேதி நெசவாளா்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூா் ஆகிய ம... மேலும் பார்க்க