செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

post image

மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 4-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவுதொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,764 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.82 அடியாக சற்று உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 76.74 டிஎம்சியாக உள்ளது. மேட்டூரில் மழை அளவு 100.6 மி.மீ

கேரளத்தில் மே 27ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர்!

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார். இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அம... மேலும் பார்க்க

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய... மேலும் பார்க்க

கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிக கனமழை: வானிலை மையம்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போதுரை வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக க... மேலும் பார்க்க