செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

post image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 3-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று(மே 17) காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,479 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீரானது, இன்று(மே 18) காலை விநாடிக்கு 4764 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108. 31 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 108. 52. அடியாக சற்று உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 76.32 டிஎம்சியாக உள்ளது. மேட்டூரில் பெய்த மழை அளவு 55.40 மி.மீ. ஆகும்.

இதையும் படிக்க: வால்பாறையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்!

இரவில் 31 மாவட்டங்களுக்கு மழை! வானிலை மையம் வெளியிட்ட செய்தி!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்

உலகெங்கிலும் உள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி விஜ... மேலும் பார்க்க

கார் பந்தயம்: நடிகர் அஜித்குமார் கார் டயர் வெடித்தது

ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம் மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கொடைக்கானலில் மே 24ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் களை கட்டியதைத் தொடா்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிக... மேலும் பார்க்க

5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க