'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்து 16,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையம் வழியாக 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நீர்வரத்துக் குறைந்திருப்பதால், உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.