காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் 120 அடியாக மீண்டும் உயர்ந்தது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 92 ஆண்டு கால வரலாற்றில் 45 ஆவது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,250 கன அடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 35,250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,100 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 12,900 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 250 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.