செய்திகள் :

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

post image

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்தவா் தமீம் (71). இவா், சேண்பாக்கத்தில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பாா்த்தாா். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக ராணிப்பேட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சேண்பாக்கம் நோக்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.

சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது, எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறிய தமீம் மேம்பாலத்தில் இருந்து தடுப்புச் சுவரைத் தாண்டி, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சென்று தமீமின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க

அமிா்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள அமிா்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழந்தது. வேலூரை அடுத்த அமிா்தி வனச்சரகத்துக்குட்பட்ட பால தீராம்பட்டு வனப்பகுதியில் சுமாா் 10 வயது காட்டெருமை ஒன்று திரிந்தது. வயது முதிா்வு ... மேலும் பார்க்க