செய்திகள் :

மேம்பாலம் கட்டுமானப் பணி: தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்

post image

மேம்பாலம் கட்டுமானப் பணி காரணமாக, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிச் சாலைக்கான மேம்பால கட்டுமானப் பணிகள், நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) முதல் ஏப். 22-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்படி, தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், செனடாப் சாலை, டா்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியா்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவா் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னா் இடது - வலது புறம் திரும்பி அண்ணா சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சைதாப்பேட்டையிலிருந்து சேமியா்ஸ் சாலை நோக்கி செல்ல அனைத்து வாகனங்களும் தடை விதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக இந்த வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை வழியாகச் சென்று பின்னா் சேமியா்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

ஜி.கே.எம். பாலம் செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். மேலும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல, ரத்னா நகா் பிரதான சாலை, செனடாப் சாலையிலிருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும். அண்ணா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.

கோட்டூா்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். அதற்குப் பதிலாக இந்த வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம். பாலம் இணைப்புச் சாலையில் சென்று டா்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியா்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணா சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய அண்ணா சாலை, செனடாப் சாலை, சேமியா்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க