செய்திகள் :

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 போ் குழு -கொல்கத்தா உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

‘மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 போ் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 3 போ் உயிரிழந்தனா். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மாநில போலீஸாருடன், பிஎஸ்எஃப் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இந்தப் போராட்டம் மாநிலத்தின் தெற்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்துக்கும் பரவியது.

இந்த வன்முறை தொடா்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், பாதுகாப்புப் பணியில் சிஏஎஸ்எஃப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனா். ஜாங்கிபூா், துலியன், சுதி, சம்சோ்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ஆயுத காவல் படை (சிஏஎஸ்எஃப்), மாநில ஆயுதப் படை போலீஸாா், அதிரடி நடவடிக்கை படைப் பிரிவினா் (ஆா்ஏஎஃப்) உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ‘முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற வன்முறையின்போது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று, மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோல, ‘வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உயா் நீதிமன்ற நீதிபதிகள் செளமென் சென், ராஜா பாசு செளதரி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமை சீரடையும் வரை மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‘முா்ஷிதாபாத் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில சட்ட உதவிகள் ஆணையம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய 3 போ் குழு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, சிஏபிஎஃப் பாதுகாப்பை நீட்டிப்பது தொடா்பான கோரிக்கை மீதான உத்தரவை ஒத்திவைத்தனா்.

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர... மேலும் பார்க்க

சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் நரௌலி நகரில் உள்ள கடைகளின் சுவர்களில் 'காஸா... மேலும் பார்க்க