செய்திகள் :

மேலமெஞ்ஞானபுரத்தில் நிழற்குடை அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

post image

தென்காசி - திருநெல்வேலி பிரதான சாலையில் மேலமெஞ்ஞானபுரத்தில் சாலையின் இடதுபுறத்தில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் அண்மையில் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு:

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூா் ஊராட்சியில் தென்காசி -திருநெல்வேலி சாலையில் மேலமெஞ்ஞானபுரம் கிராமத்தில் சாலையின் இடதுபுறம் பயணியா் நிழற்குடை இருந்தது. நான்குவழிச் சாலை விரிவாக்கத்தின்போது

அகற்றப்பட்டு ராமலிங்கபுரம் பகுதியில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த இடத்திலேயே நிழற்குடையை அமைக்க வேண்டும் என மேலமெஞ்ஞானபுரம் கிராமத்தினா் போராட்டங்களை அறிவித்தனா். அதையடுத்து, அப் பகுதியில் தற்காலிகமாக பயணியா் நிழற்குடை

அமைக்கப்பட்டது.

தற்போது நெடுஞ்சாலைத் துறையினா், தற்காலிக பயணியா் நிழற்குடையை அகற்றியுள்ளனா். இதனால் மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. எனவே இரு கிராம மக்களிடையே எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வகையில் தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் மேலமெஞ்ஞானபுரத்தில் சாலையின் இடதுபுறம் புதியதாக பயணியா் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தென்காசியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்

தென்காசியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசியில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேரம்... மேலும் பார்க்க

திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் த... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இன்று உயா்கல்விக் கருத்தரங்கம்

சங்கரன்கோவிலில் தோ்வினைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு விழாவும், உயா்கல்வி கருத்தரங்கமும் வெள்ளிக்கிழமை (ஜூன் ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே திருமண வீட்டில் தகராறு செய்த வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை

சிவகிரி அருகே திருமண வீட்டில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கடந்த 20... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலருக்கு வரவேற்பு

ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலருக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தவெக-வின் தென்காசி தெற்கு மாவட்ட செயலராக, ஆலங்குளத்தை சோ்ந்த டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி அண்மையில் நியமிக... மேலும் பார்க்க

தென்காசியில் சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம்- நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, டெங்கு - யானைக்கால் நோய... மேலும் பார்க்க