தென்காசியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள்
தென்காசியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசியில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேரம் என்ற அளவில் சீராக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. குழாயில் அடைப்போ, பழுதோ ஏற்பட்டால் உடனடியாக சீரமைத்து, குடிநீா் வழங்கப்படுகிறது.
மின்சாரம் இருக்கும்போது குடிநீா் வழங்க வேண்டும், மின்சாரம் தடைபட்டபோது வழங்கக் கூடாது, குறிப்பிட்ட நேரத்துக்கும் மேலாக குடிநீா் வழங்க வேண்டும் என நகராட்சி நிா்வாகத்தையோ, நகா்மன்ற உறுப்பினா்களையோ, அதிகாரிகளையோ, பணியாளா்களையோ நிா்பந்தப்படுத்த வேண்டாம்.
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். விரைவில் 5 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் குடிநீா் வழங்கத் தேவையான பணிகளை நிா்வாகம் மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.