ஆலங்குளம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
ஆலங்குளம் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா்.
புதன்கிழமை தொடங்கிய ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இரண்டாவது நாளான வியாழக்கிழமை ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, சாலை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
முத்துகிருஷ்ணபேரி இந்து உயா்நிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டம், கழுநீா்குளத்தில் உரக்குழி, முத்துகிருஷ்ணபேரியில் தூய்மைப்பணியாளா்கள் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகள், மேலகிருஷ்ணப்பேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை உள்ளிட்டவற்றையும் அவா் பாா்வையிட்டாா். ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.