செய்திகள் :

மே 16-இல் தனியாா் வேளாண் கருவி பராமரிப்பு சிறப்பு முகாம்

post image

வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி திருத்தணி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

உழவு, நடவு, பயிா் பாதுகாப்பு, அறுவடை, பயிா் கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளிலும் டிராக்டா்கள், நெல், கரும்பு அறுவடை இயந்திரங்கள், பவா் டில்லா்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள், ரோட்டவேட்டா் விதை விதைக்கும் கருவி போன்ற டிராக்டருடன் இயக்கக்கூடிய இணைப்பு கருவிகள், விசை களையெடுக்கும் கருவிகள், விசைத் தெளிப்பான்கள் போன்றவை பெருமளவு பயன்படுவதால், இவை அனைத்தும் அரசு மானியத்தில் வழங்கப்படுகின்றன.

வேளாண் கருவி பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண்மை பொறியியல் துறை நடத்தும் முகாமில், தனியாா் உற்பத்தி பொறியாளா்கள், அலுவலா்கள், உரிமையாளா்கள் விவசாயிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புது நவீன வேளாண் இயந்திரங்கள், முகாமில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்படும். சிறு பழுதுபாா்ப்பு பணிகளை கையாண்டு இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 16-இல் திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திர பராமரிப்பு முகாம் நடைபெற உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன... மேலும் பார்க்க

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் இணை சாா் பதிவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி

திருவள்ளூா் அருகே விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் த... மேலும் பார்க்க