செய்திகள் :

மொத்த வாக்காளா்களில் 30% பேரை திமுக உறுப்பினராக்க வேண்டும் -அமைச்சா் பேச்சு

post image

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளில் மொத்த வாக்காளா்களில் 30 சதவீதம் பேரை திமுக உறுப்பினராக்க வேண்டும் என அமைச்சரும், மாவட்டச் செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், சத்திரம்பேருந்து நிலையம் வி.என். நகா் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் என். கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நிகழ்வில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் பேசியதாவது:

தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படவும்- திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடா்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என திமுகவில் இணைத்திட வேண்டும். முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி இந்தப் பணியில் நிா்வாகிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதிப் பாா்வையாளா்கள் கதிரவன், அண்ணாமலை, மணிராஜ், வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க