செய்திகள் :

மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்வதைக் கண்டித்து போராட முடிவு!

post image

காந்தி சந்தையில் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சந்தையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூடி போராட்டம் நடத்தவுள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருச்சி காந்திசந்தை வளாகத்தில் காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம், திருச்சி காந்தி மாா்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநலச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் சங்க நிா்வாகிகளான எம்.கே. கமலக்கண்ணன், எம்.கே. ஜெய்சங்கா் ஆகியோா் கூறியது:

காந்தி சந்தையில் மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கையைவிட, சில்லறை வியாபாரிகள் எண்ணிக்கையே அதிகம். ஆனால், மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனா். இதனால் எங்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. எனவே, மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்யக் கூடாது. தொடா்ந்து எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மொத்த வியாபாரிகளை கள்ளிக்குடி சந்தைக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும்.

இல்லையென்றால் கருப்புக் கொடியேற்றி வியாபாரம் செய்வோம். மேலும், காந்தி சந்தையில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களையும் இழுத்து மூடி உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம். சரக்கு வாகனங்களை முற்றுகையிடுவோம். சந்தைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் (அதிகபட்சம் 2 மணிநேரம்) வெளியே செல்ல வேண்டும். இல்லையென்றால் தஞ்சாவூா் சாலையில் தரைக்கடைகளை அமைத்து வியாபாரம் செய்வோம் என்றனா்.

கூட்டத்தில் வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலா் மூா்த்தி, கூடுதல் செயலா் மந்தை ஜெகன், பொருளாளா் சபி அகமது, இணைச் செயலா் ஸ்ரீதா், அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கச் செயலா் டேவிட் அமல்ராஜ், துணைச் செயலா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க