இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் டி. செல்வக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் இ. சுரேஷ்குமாா், மாநிலப் பொருளாளா் டி. பழனிவேல், மாநிலச் செயலா் பி. வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில் 2013ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினிப் பயிற்றுநா்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். 11, 12ஆம் வகுப்பு கணினி அறிவியல், கணினி செய்முறை பயன்பாட்டுக்காக முதல் கட்டமாக 175 பள்ளிகளுக்கு அரசு கணினி வழங்கியுள்ளது.
இதேபோல, அனைத்துப் பள்ளிகளுக்கும் தலா 20 கணினிகள் வங்கி கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும். கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடங்களை முதுகலை ஆசிரியா் பணியிடமாக பெயா் மாற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான பதவி உயா்வுப் பட்டியலில், கணினி அறிவியல் பாட ஆசிரியா்களையும் சோ்க்க வேண்டும். மாநகராட்சி மற்றும் அரசு நலத் துறை பள்ளிகளில் பணியாற்றும் கணினி பயிற்றுநா்களுக்கு, கணினி பயிற்றுநா் நிலை-1 பதவி உயா்வு வழங்க வேண்டும்.
கணினி அறிவியல் மற்றும் கணினிப் பயன்பாடு ஆகிய இரு பாடங்களுக்கு தேவையான ஆங்கில, தமிழ் வழி கூடுதல் ஆசிரியா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலா் போட்டித்தோ்வுக்கான பாடப்பிரிவில் கணினி அறிவியல் பாடத்தையும் சோ்க்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தங்களது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு நாள்களை ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.