செய்திகள் :

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது: சந்திரபாபு நாயுடு

post image

அமராவதி: ‘மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய் மொழியில் கல்வி கற்பவா்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனா்’ என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தமிழகத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகா் பவன் கல்யாண், ‘லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழக அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கின்றனா்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவா்கள், ஹிந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனா்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இவரது கருத்துக்கு தமிழக அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பவன் கல்யாண், ‘ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும்; ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிா்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல’ என்று பதிவிட்டாா்.

இந்த நிலையில், இந்த மொழி விவகாரம் குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பேசியதாவது:

மொழி என்பது தகவல்தொடா்புக்கானது மட்டுமே. மொழியால் அறிவு வளா்ந்துவிடாது. தாய்மொழியில் கல்வி கற்பவா்கள் மட்டுமே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்கி வருகின்றனா். தாய்மொழியில் கல்வி கற்பது எளிது.

அதுபோல, மொழி என்பது வெறுப்புக்குரியது அல்ல. ஆந்திரத்தில் தெலுங்கு தாய்மொழியாக உள்ளது. தேசிய மொழியான ஹிந்தியும், சா்வதேச மொழியான ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளன.

வாழ்வாதாரத்துக்காக தாய்மொழியை மறக்காமல், பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது அவசியமாகும். தேசிய மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாடு முழுவதும் ஹிந்தியில் தங்கு தடையின்றி பேச முடியும்.

எனவே, மொழியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது. முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றாா்.

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க