செய்திகள் :

மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

post image

முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது உடன் பிறந்த சகோதரா் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

ஜூன் 10-ஆம் தேதியிட்ட இந்த நோட்டீஸ், சென்னை சாந்தோமைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ. சுரேஷ் மூலம் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, ரவி ராமமூா்த்தி, நடராஜன், சிவ சுப்பிரமணியன், ஸ்ரீதா் சுவாமிநாதன், சுவாமிநாதன் சரத் குமாா் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தனது சகோதரரும் சன் தொலைக்காட்சி குழும நிறுவனருமான கலாநிதி மாறன், ஊடகக் குழுமம் மற்றும் பிற இணைப்பு நிறுவனங்களில் பெரிய அளவிலான காா்ப்பரேட் மோசடியை திட்டமிட்டுச் செய்ததாகவும், மோசடியாக பங்குகளை மாற்றுதல், பணமோசடி செய்தல் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற சட்டபூா்வ வாரிசுகளுக்கு அவா்களின் சொத்துகளின் உரிமையான பங்கை மறுத்ததாகவும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தனது தந்தை முரசொலி மாறனின் மரணத்துக்கு முந்தைய செப்டம்பா் 15, 2003 நிலவரப்படி அசல் பங்குகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், கலாநிதி மாறன் ‘சட்டவிரோதமாக’ பெற்ற அனைத்து சொத்துகள், ஈவுத்தொகைகள் மற்றும் சலுகைகளை ஏழு நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும்; இல்லையெனில் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (மத்திய நிதித் துறையின் கீழ் உள்ள எஸ்எஃப்ஐஓ) உள்பட பல்வேறு மத்திய துறைகளிடம் இருந்து சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும் என்று தயாநிதி மாறன் நோட்டீஸில் எச்சரித்துள்ளாா்.

கலாநிதி மாறன் தனக்கு ஒரு பங்குக்கு ரூ.10 வீதம் (மொத்தம் ரூ.1.2 கோடி) 12 லட்சம் பங்குகளை ஒதுக்கீடு செய்ததாகவும், இதனால் சன் டிவியின் 60% கட்டுப்பாடு அவருக்குக் கிடைத்ததாகவும் தயாநிதி மாறன் கூறியுள்ளாா். ரூ.1.2 கோடிக்கு வாங்கப்பட்ட இந்தப் பங்குகளின் மதிப்பிடப்பட்ட உண்மையான மதிப்பு ரூ.3,500 கோடி வரை இருக்கும்.

முரசொலி மாறனின் மரணத்துக்குப் பிறகு, அவரது பெயரில் இருந்த 95,000 பங்குகள் சட்டபூா்வ வாரிசுச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழ் இல்லாமல் அவரது தாயாா் மல்லிகா மாறனுக்கு மாற்றப்பட்டதாகவும், பின்னா் இவை மற்ற சட்டபூா்வ வாரிசுகளைத் தவிா்த்து கலாநிதி மாறனுக்கு விற்கப்பட்டதாகவும் தயாநிதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேலும், குங்குமம் பப்ளிகேஷன்ஸ், கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் சன் குழுமத்துடன் தொடா்புடைய பிற நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதில் மாறன் குடும்பம் முதல்வா் மு.க. ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாளுடன் சம உரிமையைக் கொண்டிருந்ததாகவும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

நிறுவன நிதிகள் தனிப்பட்ட லாபத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பங்கு வாங்குதல்களுக்கு நிதியளிக்கவும், கலாநிதி மற்றும் காவேரியை வளப்படுத்தவும் ஒருதலைப்பட்சமாக ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டதாகவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் தொடா்பாக தயாநிதி மாறன் மற்றும் வழக்குரைஞா் சுரேஷின் கருத்தை அறிய தினமணி மேற்கொண்ட தொடா் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க