செய்திகள் :

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சரின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

post image

மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சருக்கு ஜாமீன் வழங்கி சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு, முதலமைச்சரின் 10% ஒதுக்கீட்டின் கீழ், யோலாகர் மாலா பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு (எல்ஐஜி) இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது.

அதற்கு தகுதி பெற தங்களை எல்ஐஜி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் நகரத்தில் சொந்தமாக வீடு இல்லை என்றும் கோகடே சகோதரர்கள் மோசடி செய்து குடியிருப்பைப் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகியோர் மீது மறைந்த முன்னாள் அமைச்சர் டி.எஸ். டிகோலே புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க | லாலு உள்பட 77 பேருக்குத் தில்லி நீதிமன்றம் சம்மன்!

இந்த வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து பிப். 20 அன்று வெளியான தீர்ப்பில் இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்து நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரை நீதிமன்றம் விடுவித்தது. இந்தக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கோகடே எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மாணிக்ராவ் மற்றும் சுனில் கோகடே ஆகியோர் மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி அமர்வின் முன் தண்டனைக்கு எதிராக நேற்று (பிப். 24) மேல்முறையீடு செய்தனர்.

அவர்களின் தண்டனையை இடைநிறுத்தம் செய்வதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீடு தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து பதில் கோரினர்.

மேலும், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி இறுதி தீர்ப்பு வரும் வரை இருவரும் ரூ. 1 லட்சத்திற்கு தனிப்பட்ட பத்திரம் மற்றும் ஜாமீன் பத்திரம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க