செய்திகள் :

மோசமான அரசியலில் ஈடுபடும் பஞ்சாப் அரசு: அமைச்சர் குற்றச்சாட்டு!

post image

ஹரியாணா, பஞ்சாப் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக நடந்துவரும் வார்த்தைப் போரில் ஆம் ஆத்மியை ஆளும் பஞ்சாப் அரசு தில்லியில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் மோசமான அரசியலில் ஈடுபடுவதாகத் தில்லி பாஜக அரசு குற்றம் சாட்டியது.

ஹரியாணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற பக்ரா வியாஸ் மேலாண்மை வாரியம்(பிபிஎம்பி) மூலம் பஞ்சாப் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டினார். மார்ச் மாதத்திற்குள் அண்டை மாநிலம் தனது நீர் பங்கை அளித்துவிட்டதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக தில்லி நீர்வள அமைச்சர் பர்வேஷ் வர்மா,

ஹரியாணா, தில்லிக்கு யமுனை நதிநீரை நிறுத்துவன் மூலம் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் அரசு மோசமான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

தில்லியில் தோல்வியடைந்த பிறகு அவர்கள் தில்லியில் தண்ணீர் நெருக்கடியை உருவாக்க விரும்புகிறார்கள். இருப்பினும், வியாழக்கிழமை நிலவரப்படி நீர் விநியோகம் வழக்கம்போல் பராமரிக்கப்படுவதாக தில்லி நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான நீர் வழங்க இரவும், பகலும் உழைத்து வருகிறோம். ஆனால் பஞ்சாப் அரசு தில்லி மக்களைப் பழிவாங்க விரும்புகிறது. இந்த மோசமான அரசியலை நிறுத்துங்கள், இல்லையெனில் பஞ்சாபிலிருந்தும் வெளியேற்றப்படுவீர்கள் என்று வர்மா கூறினார்.

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், இற... மேலும் பார்க்க

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் கோரிக்கை

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்... மேலும் பார்க்க

புதிய உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி!

2025 ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 2025-26 ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் கைது!

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியில் அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்கள... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்!

பயணிகள் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. மேலும் பார்க்க