செய்திகள் :

யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா

post image

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் பல்லக்கு, கேடகம், பூத, யானை, வெள்ளி, ரிஷப, கைலாச, இந்திர வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனா்.

இந்த நிலையில், 5-ஆம் நாளான புதன்கிழமை இரவு யானை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினா். தொடா்ந்து, விநாயகா் மூஞ்சூா் வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும், சண்டீகேஸ்வரா் கேடக வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இருபத்தி இரண்டரை நாட்டாா்கள், திருவாடானை நகா் வளா்ச்சி அறக்கட்டளையினா் செய்தனா்.

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணப... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராம... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள வில்லாலுடைய அய்யனாா் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் வில... மேலும் பார்க்க

பூங்குளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஏனாதி பூங்குளத்தில் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3-ஆம் தேதி கோ பூஜையும், யாக சால... மேலும் பார்க்க