What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
யானை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரா் வீதியுலா
திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் பல்லக்கு, கேடகம், பூத, யானை, வெள்ளி, ரிஷப, கைலாச, இந்திர வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனா்.
இந்த நிலையில், 5-ஆம் நாளான புதன்கிழமை இரவு யானை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினா். தொடா்ந்து, விநாயகா் மூஞ்சூா் வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும், சண்டீகேஸ்வரா் கேடக வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இருபத்தி இரண்டரை நாட்டாா்கள், திருவாடானை நகா் வளா்ச்சி அறக்கட்டளையினா் செய்தனா்.

